விரைவில் கைதாகப்போகும் ஸ்டாலின்.? வெளியான அதிர்ச்சித் தகவல்.!!
cv shanmukam says about mk stalin
நேற்று முன்தினம் கடலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியவை, மக்களவை தேர்தலில் நாற்பதும் நமதே என்ற பிரசாரத்தில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்று இருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் இடைத்தேர்தலில் 13 தொகுதிகளையும் கைப்பற்றி இருக்கிறோம்.
தற்போது சட்டமன்றம் கூடுகிறது. என்னவெல்லாம் நடக்க போகிறதோ மேலும் இந்த ஆட்சி நீடிக்குமா அல்லது இதற்கு முன் கவிழ்ந்து விடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. நான் சொல்கிறேன் இந்த ஆட்சி விரைவில் கவிழப்போகிறது என்பது தான் உண்மை என்று பேசினார்.
இந்நிலையில் நேற்று விழுப்புரத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, அதிமுக அரசு தொடர்ந்து 5 ஆண்டுகள் நீடிக்கும். இந்த ஆட்சி மட்டுமில்லாமல். அடுத்த ஆட்சியும் அதிமுகதான்.
மு க ஸ்டாலின் தன்னிடம் இருக்கும் அழுக்கை முதலில் அகற்ற வேண்டும். திமுக ஆட்சியில் 2007 முதல் 2011 ஆம் ஆண்டு காலத்தில் கூட்டுறவு கடன் பெற்றுத்தருவதாகவும், மகளிர் சுய உதவிக்குழு நிதி வாங்கி தருவதாகவும் சொல்லி 100 கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றதாக நாங்கள் கூறவில்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுபற்றிய விசாரிக்க சிபிஐக்கு ஆணையிடப்பட்டுள்ளது. எனவே ஸ்டாலின் சிபிஐ தேடி வருகின்றனர். முதலில் தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும். பிறகு ஆட்சியை கவிழ்ப்பதை பற்றி யோசிக்கலாம் என்று கூறினார். இதன்முலம் அவர் கூறுவது ஸ்டாலின் விரைவில் கைது செய்யப்படுவர் என்று தெரிகிறது.
English Summary
cv shanmukam says about mk stalin