சென்னை மக்களுக்காக வரும் குடிநீரை தடுக்கும் திமுகவின் முன்னணி தலைவர்., கொந்தளித்த அமைச்சர்!!
cv shanmugam about water issue
தமிழகத்தில் போதிய மழை இல்லாமல் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றி மக்கள் குடிநீருக்காக அல்லல் பட்டு வரும் நிலையில் தமிழக அரசு மக்களின் குடிநீர் தேவைக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் காவிரி கூட்டு குடிநீரை சென்னை கொண்டு செல்ல திட்டமிட்டு அதற்கான பணிகள் துவங்கி உள்ளன
இந்தநிலையில் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் காவிரி கூட்டு குடிநீரை சென்னை கொண்டு சென்றால் போராட்டத்தை சந்திக்க நேரிடும் என திமுக பொருளாளர் துரைமுருகன் தமிழக அரசை கண்டித்தார். மேலும் அடுத்து கூடவுள்ள சட்டமன்ற கூட்ட தொடரில் தண்ணீர் பிரச்சனை தான் முதன்மையாக எடுத்து பேசுவோம் என தெரிவித்தார்.
இதனையடுத்து துரைமுருகனின் கருத்துக்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தமிழகத்தில் இருந்து கொண்டு, நம் மாநிலத்தை சேர்ந்த மற்றொரு ஊருக்கு தண்ணீர் தர மாட்டேன் என கூறுபவர்களுக்கு, சமுதாயத்தின் மீது என்ன அக்கறை உள்ளது என கேட்டார்.
தமிழகத்தில் உள்ள மற்றொரு ஊருக்கே தண்ணீர் தரமாட்டோம் என இவர்களே இப்படி கூறினால், அண்டை மாநிலமான கர்நாடகத்தில் இருந்து மட்டும் நமக்கு எப்படி தண்ணீர் தருவார்கள் என அமைச்சர் சி.வி. சண்முகம் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு கேள்வி எழுப்பினர்
English Summary
cv shanmugam about water issue