இதை செய்யும் வரை என் கணவரை புதைக்கமாட்டேன் - குற்றவாளியின் மனைவி அதிரடி சபதம்.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று குற்றவாளிகளை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்ற காவல்துறையின் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. 

தெலுங்கானா பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்து கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்மந்தபட்ட 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களை தூக்கிலிட ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. 

இவர்களை சம்பவம் குறித்து நடித்து காட்டி விசாரணை செய்ய சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றபோது தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், போலீஸார் குற்றவாளிகளை என்கவுண்ட்டர் செய்தனர். இந்த செயலை பலரும் சரியான தண்டனை என கொண்டாடி வருகின்றனர். 

இருப்பினும், மனிதநேயமற்ற செயலை செய்த அவர்களுக்கு, இது மனிதநேய செயல் அல்ல என்று பலரும், கண்டனம் செய்து வந்த நிலையில் என்கவுண்ட்டர் செய்த காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இருவர் கோரிக்கை மனு கொடுத்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. 

இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான சென்னகேசவலு என்ற குற்றாவளியின் மனைவி ரேணுகா இதுகுறித்து தெரிவித்துள்ள கருத்தில், இதுபோன்ற குற்றங்களை செய்த பலர் இன்னமும் சிறையில் தான் இருந்து வருகின்றனர். எனவே, அவர்களும் சுட்டுக்கொல்லப்பட வேண்டும். அவர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் தான் என் கணவரை நான் புதைப்பேன். அதுவரை புதைக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CULPRIT WIFE SAYS ABOUT OTHER RAPE CASE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->