ப.சிதம்பரத்துக்காக மேடையிலே உயிரை விட்ட, முக்கிய நிர்வாகி! சோகத்தில் காங்கிரசார்!! - Seithipunal
Seithipunal


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் ப.சிதம்பரம், சிபிஐ விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

சிபிஐ தாக்கல் செய்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு ஜாமீனை மறுத்து 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. இதனால் வரும் 19 ஆம் தேதி வரை அவருக்கு திகார் சிறையில் தற்போது அடைக்கப்பட்டார். 

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடலூர் நெல்லிக்குப்பத்தில் ப.சிதம்பரம் கைதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்ட துணை தலைவர் முருகன் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cuddalore congress member death


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->