போராட்டத்தை எப்படியாவது வெற்றிபெற செய்யுங்கள்.! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


ஒன்றிய அரசை கண்டித்து செப்டம்பர் 20 கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக மக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் விலைகளின் தாறுமாறான உயர்வுக்கு காரணமான வரி விதிப்புகளை கைவிட வேண்டும், வேலையில்லா திண்டாட்டத்தை ஒழித்திட வேண்டும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். 

இந்திய மக்களின் வரிப்பணத்தால் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை, பொதுச் சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்கும் பணமயமாக்கல் திட்டத்தையும், ஆயுள் காப்பீட்டு கழகம், பாரத் பெட்ரோலியம், ஏர் இண்டியா உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும், அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களை வேவுபார்க்கும் பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்துவது குறித்து உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இயக்கம் நடத்துவது என 2021 ஆகஸ்ட் 20ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டு கூடிய 19 கட்சிகள் சார்பாக அறைகூவல் விடப்பட்டது.

இந்த அறைகூவலுக்கேற்ப தமிழகத்தில் 2021 செப்டம்பர் 20ம் தேதி திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தி.க, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்ல்ம், மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சிகளின் சார்பில் இவ்வியக்கத்தை சக்தியாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வியக்கத்தை வெற்றிபெறச் செய்யும் வகையில் கட்சி அணிகள் முழுவதும் செப்டம்பர் 20 அன்று அவரவர் வீட்டின் முன்பும், கட்சி அலுவலகங்கள் முன்பும், கிராமங்கள்தோறும் காலை 10 மணி அளவில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திட வேண்டுமென கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

ஒன்றிய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் மேற்கண்ட போராட்டத்திற்கு தமிழக மக்களும் ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPIM protest announce sep 20


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->