திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதி.!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக கட்டுப்பாட்டிலிருந்த கோரோனா நோய்த்தொற்று பரவல், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி, கர்நாடகா, கேரளா, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக நோய் தொற்று பரவ அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

இதன் காரணமாக கோரோனா நோய் தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு மத்திய -மாநில அரசுகள் தொடர்ந்து அறிவித்து வருகின்றன. இன்று ஒரு நாள் மட்டும் இந்தியாவில் 81 ஆயிரம் பேருக்கு கோரோனா னாய் தோற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி திமுக கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் எஸ். குணசேகரனுக்கு கொரோனா னாய் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமால் இருந்த அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில்,  அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPI candidate affected corona


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->