அதிமுகவில் அடுத்தடுத்து 2 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி.. அதிர்ச்சியில் அதிமுகவினர்.!!
corona positive in gummidipoondi admk mla
நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை.
பொதுமக்கள் மட்டும் இல்லாமல் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், உள்ளிட்ட முன்கள பணியாளர்களும் அரசியல் தலைவர்கள், எம்.எல்.ஏ, எம்.பி, மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால், எம்.எல்.ஏக்கள், எம்.பி-க்கள் என பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நாங்குநேரி தொகுதி அதிமுக எம்எல்ஏ நாராயணனுக்கு கடந்த சில நாட்களாக சளி மற்றும் காய்ச்சல் இருந்துள்ளது, அதையடுத்து, அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். பரிசோதனை முடிவு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ கேஎஸ் விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான உடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுவரை 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
corona positive in gummidipoondi admk mla