முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி..! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்.!! - Seithipunal
Seithipunal


 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,15,736 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த  24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 630 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,28,01,785 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லப் குமார் தேப்புக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவு செய்தவை, எனக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது. 

மருத்துவரின் ஆலோசனைப்படி நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். திரிபுராவில் கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona positive in biplab kumar deb


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->