#சற்றுமுன் || அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் - பிரதமர் மோடி உரை.!
Constitution Day pm modi speech
அரசியல் சாசன தின விழாவில், பிரதமர் மோடி அவர்கள் தற்போது உரையாற்றிவருகிறார். அவரின் உரையில்,
"அரசியல் சாசனத்தின் படி, குடிமகனின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும். ஆண், பெண் இருபாலரையும் சமமாக கருத வேண்டும் - அரசு இதனை சரியாக கடைபிடிக்கிறது.
அரசின் நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு சமூகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைத்துள்ளது. அரசியல் அமைப்பு சட்டம் எந்த மனிதருக்கும் வேறுபாடு பார்ப்பதில்லை. பணக்காரர்களுக்கு கிடைக்கும் வசதி அடித்தட்டு மக்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநகர மக்களுக்கு கிடைக்கும் பலன்கள் கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து தரப்பு மக்களையும் வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது. காலனி ஆதிக்கம் தற்போது எங்கும் இல்லை. அரசின் நல்ல திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதில் கால தாமதம் ஏற்படக்கூடாது. வேளாண் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் இடமாக கட்ச் மாவட்டம் திகழ்கிறது." என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.
English Summary
Constitution Day pm modi speech