திமுகவிற்கு செக் வைத்த காங்கிரஸ்! திமுகவை டென்ஷனாக்கும் அதிர்ச்சி முடிவு!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகுதிகளில் நாங்குநேரி காங்கிரஸ் கட்சி வசமிருக்கும் தொகுதியாகும். அதனால் அந்த கட்சி அங்கு போட்டியிடவே விரும்புகிறது. ஆனால் திமுக விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என தெரிகிறது. 

இதனையடுத்து தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என்பதனை அறிந்துகொள்ள, நாங்குநேரியில் செயல்வீரர்கள் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசி வருகிறார். மேலும் 50 ஆண்டுகளாக தமிழகத்தில் எதிர்க்கட்சியாக மட்டுமே இருப்பது ஏன்? நம்மால் தனித்து நின்று வெற்றி பெற முடியாதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் அழகிரி. 

தொடர்ந்து பேசிய அழகிரி, மற்ற கட்சிகளை போல காங்கிரஸ் கட்சி கட்டுப்பாடு இல்லாத இயக்கமாக இருக்கிறது, கட்டுப்பாடு இல்லாத இயக்கம் வெற்றி பெறாது எனவும், குறைந்தபட்சம் தெருவில் நடக்கும் தேர்தலிலாவது நாம் வெற்றி பெற முடியுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்ய முடியும் என கே.எஸ்.அழகிரி பேசியுள்ளார். இதன்மூலம் திமுக சீட் ஒதுக்கவில்லை என்றால் நாங்குநேரியில் காங்கிரஸ் தனித்து  களம் காணும் முடிவில் இருப்பதாகவே தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress spoke about contest in Nanguneri constituency


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->