அயோத்தி: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறது.. காங்கிரஸ் செயற்குழு!
congress says ayodhya case
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா உள்ளிட்ட 3 அமைப்புகள் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என கடந்த 2010ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா உள்ளிட்ட 3 அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6 ஆம் இறுதி விசாரணையை தொடங்கியது, கடந்த 40 நாட்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கே சொந்தமானது 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவிலை கட்டலாம் என நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை காங்கிரஸ் மதிக்கிறது என்று காங்கிரஸ் செயற்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை வளர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம் என்று காங்கிரஸ் செயற்குழு அறிக்கை கிறிப்பிட்டுள்ளது.
English Summary
congress says ayodhya case