சென்னை ரவுடிக்கு முக்கிய பொறுப்பு கொடுத்த காங்கிரஸ்.! வெட்டி படுகொலை., புதுப்பேட்டை 2.?!
congress rowdy kill issue
சென்னை : காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகரும், பிரபல ரவுடியுமான நாகூர் மீரான், மற்றொரு ரவுடி கும்பலால் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம், சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகூர் மீரான். இவர் காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவராக இருந்து வருகிறார்.
மேலும், இவர் பிரபல ரவுடியாக இருந்து வருகிறார். இவர் மீது ஆதம்பாக்கம், கே.கே.நகர், குன்றத்தூர், கொரட்டூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.
தற்போது நன்மங்கலம் அருகே உள்ள வெள்ளக்கல் பகுதியில் வசித்து வந்த நாகூர் மீரான், நேற்று இரவு ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகர் 3,வது தெருவில் உள்ள நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று சரமாரியாக நாகூர் மீரானை வெட்டி படுகொலை செய்தது.
\மேலும், கொலை செய்த 5 பேர் கொண்ட கும்பல், ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இந்த கொலை சம்மந்தமாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், யார் பெரிய ரவுடி என்பதில் என்பதில் காங்கிரஸ் கட்சி பிரமுகருக்கும் மற்றொரு தரப்பு ரவுடிக்கும் இடையே ஏற்பட்டதால் மோதலால் இந்த படுகொலை சம்பவம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
புதுப்பேட்டை படத்தில் ரவுடிசம் செய்யும் நடிகர் தனுஷ் இறுதியில், அரசியல் கட்சியில் சேர்ந்து தன்னை தூய்மைப் படுத்திக் கொள்வார். அதேபோல, காங்கிரஸ் கட்சியில் இணைந்த இந்த ரவுடிக்கும், மற்றொரு ரவுடிக்கும் யார் பெரியவர் என்ற மோதல் ஏற்பட்டு, அதில், காங்கிரஸ் கட்சி ரவுடி நாகூர் மீரான் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே எஸ் அழகிரி வெளியிட்ட அறிவிப்பில், "நாம் தமிழர் கட்சி பயங்கரவாத இயக்கமாக வருங்காலத்தில் மாறலாம்" என்று தெரிவித்து இருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியிலேயே பிரபல ரவுடிக்கு பொறுப்பு வழங்கியிருப்பது., இந்த படுகொலை சம்பவம் மூலம் வெளிவந்துள்ளது என்று பலரும் சமூகவலைத்தளம் மூலமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
congress rowdy kill issue