பாலூட்டி வளர்த்த கிளி..., கடைசி நேரத்தில் காங்கிரசின் நெஞ்சில் குத்திய இளம்பெண் பிரபலம்.!
congress priyanka mauria join to bjp
உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 10-ம் தேதி முதல் மார்ச் மாதம் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும் - சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
ஆனால், கோஷ்டி மோதலில் சிக்கி தவிக்கும் காங்கிரஸ் கட்சி போட்டியில் இல்லாமல் தனி ட்ராக்கில் சென்றுள்ளதாக அம்மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கூட சமாஜ்வாடி கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்து காங்கிரசை ஓரங்கட்டிவிட்டது.
இருப்பினும், "நான் ஒரு பெண்.., நான் போராடுவேன்" என்ற முழக்கத்துடன் பெண்களை ஒருங்கிணைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடத்தி வந்தது. இந்த பிரச்சாரங்களின் விளம்பரத்தில், உத்தரபிரதேச மகிலா காங்கிரஸ் துணைப்பொதுச்செயலாளர் பிரியங்கா மவுரியாவின் புகைப்படம் இடம்பெற்று இருந்தது.
இதன் காரணமாக பிரியங்கா மவுரியாக்கு உத்தரபிரதேச மாநில அரசியலில் மிகப்பிரபலமாக வளம் வந்தார். அவ்வளவு பிரபலமான பிரியங்கா மவுரியாவுக்கு காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.
இதனால் அதிருப்தியில் இருந்த பிரியங்கா மவுரியா காங்கிரசில் இருந்து விலகி இன்று பாஜகவில் இணைந்து உள்ளார்.
"பாலூட்டி வளர்த்த கிளி., பழம் கொடுத்து பார்த்த கிளி., கடைசி நேரத்தில், காங்கிரசின் காலை வாரிவிட்டு பாஜகவில் இணைந்துவிட்டதமா" என்பதாக, வளர்த்து விட்ட காங்கிரஸ் வாய்ப்பு தரவில்லை என்று பாஜகவில் இணைந்துள்ளார் பிரியங்கா மவுரியா.
ஒருவேளை வளரவிடாமல் தடுத்து விட்டதால் கட்சி மாறினாரோ என்னமோ...!
English Summary
congress priyanka mauria join to bjp