காந்தி பிறந்த நாளில் முக்கிய முடிவை அறிவித்த காங்கிரஸ்!! - Seithipunal
Seithipunal


தேச தந்தை மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. இந்த பிறந்த நாள் விழாவுக்கான தேசிய குழுவின் தலைவர் பிரதமர் மோடி ஆவார். இதில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் நீதிபதிகள், மக்களவை சபாநாயகர், மத்திய கேபினட் உறுப்பினர்கள், மாநில முதலமைச்சர்கள் மற்றும் காந்தியை பின் தொடரும் தொண்டர்கள் பலர் உள்ளனர்.

இந்நிலையில், மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 2 முதல் 9 ஆம் தேதி வரை பாத யாத்திரைகள் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 2 முதல் 9ம் தேதி வரை கொண்டாட திட்டமிட்டுள்ளது. காந்தி பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் பாத யாத்திரைகள் நடத்த உள்ளோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress party new announcement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->