நாங்குநேரி தொகுதியில் சிக்கிய ரூ.50 லட்சம்.! கூண்டோடு சிக்கிய முக்கிய கட்சி.?
Congress money 50 lakhs in nanguneri
நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல், இந்த மாதம் 21-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் அதிமுக, திமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு நாங்குநேரி தொகுதி ஒதுக்கப்பட்டது. அதன்படி காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி தொகுதியில் ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்தும், விக்ரவாண்டி தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து திமுக மாற்றும் கூட்டணி கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாங்குநேரி தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக, போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் ரூ.50 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
English Summary
Congress money 50 lakhs in nanguneri