சாதிய பாகுபாடுகளை களைய, பட்டியிலனத்தவரின் வாயில் இருந்து உணவை எடுத்து சாப்பிடுங்கள் - காங்., எம்.எல்.ஏ., சபீர் அஹமது கான்.!
Congress MLA Sabeer Ahmed Khan
கர்நாடகாவில், தான் சாதிகளுக்கு அப்பாற்பட்டவன் என்பதை நிரூபிப்பதற்காக, பட்டியலின துறவி ஒருவரின் வாயில் இருந்த உணவை எடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ., சாப்பிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் பேட்டை சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ சபீர் அஹமது கான், பெங்களூரில் நடைபெற்ற அம்பேத்கர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியின்போது சாதிய பாகுபாடுகளை களைவது அவசியம் என்று உரையாற்றி அவர், விழாவில் அவரின் அருகில் அமர்ந்திருந்த பட்டியலின துறவி ஒருவருக்கு உணவு ஊட்டினார்.
பின்னர் பட்டியலின துறவியின் வாயில் இருந்த உணவை எடுத்து தனக்கு ஊட்டிவிடுமாறு எம்எல்ஏ அறிவித்தார்.
அதன்படி, அந்த துறவியும் எம்எல்ஏவுக்கு தனது வாயில் இருந்த உணவை எடுத்து ஊட்டி விட்டார். அதை சாப்பிட்டுக்கொண்டே பேசிய எம்.எல்.ஏ., இப்படித்தான் சாதியப் பாகுபாடுகள் களையப்பட வேண்டும் என்று, அவர் முன்னே இருந்த மேஜையை தட்டி ஆக்ரோஷமாக பேசினார்.
அப்போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
English Summary
Congress MLA Sabeer Ahmed Khan