தமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா.!  - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை கூட உள்ளது. தமிழக சட்டப்பேரவை கூடுவதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா நோய் தொடர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி கொரோனா பரிசோதனை செய்த பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின், திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரனுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனுக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

மேலும் அவருடன் தொடர்பில் இருந்த கட்சி நிர்வாகிகள், குடும்பத்தினருக்கும் நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், காங்கிரஸ் கட்சியின் திருச்சி மக்களவை உறுப்பினரான திருநாவுக்கரசரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CONGRESS MLA RAMACHANDRAN AFFECTED CORONA


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->