மொத்தமாக ஆளும் கட்சியில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்... பேரதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சி.!
congress mla join trs
கடந்த ஆண்டு தெலுங்கானாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில், 88 தொகுதியை தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி கைப்பற்றி ஆட்சி அமைத்தது. அதன்பிறகு தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் முதல்வராக பதவியேற்றார்.
அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், ஒருவர் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் தற்போது எண்ணிக்கை 18 ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில். காங்கிரஸ் 12 எம்எல்ஏக்களும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்து விட்டதாகவும், சட்டசபையில் தெலுங்கானாராஷ்ட்ரீய சமிதி கட்சி எம்எல்ஏக்களுடன் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.கடந்த மார்ச் மாதம் 11 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்தித்து தங்களை தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியில் இணைக்க கோரினர். இதற்கிடையே மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏவான ரோஹித் ரெட்டி, சந்திரசேகர் ராவ் மகனை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.