காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்து, பாஜகவில் இணைந்த முக்கிய புள்ளி.!!
congress mla join bjp for madhya pradesh
மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 சட்டமன்ற உறுப்பினர்களில் கமல்நாத் அரசுக்கு 120 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளனர்.
அதில் 114 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் பகுஜன் சமாஜ் , சமாஜ்வாடி மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. சில நாட்களாக கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து விடும் என கூறப்பட்டது
மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் முக்கிய தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா காங்கிரசில் இருந்து விலகிய நிலையில் அவரது ஆதரவு எம்எல்ஏ அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர்.
ஜோதிர் ஆதித்ய சிந்தியா டெல்லியில் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மோடியின் வீட்டுக்கு வருகை தந்து ஒரே நேரத்தில் சந்தித்தனர். இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு ஜோதிராதித்ய சிந்தியா கடிதம் அனுப்பினார்.
ஜோதிராதித்ய சிந்தியா கட்சியில் இருந்து விலகியதையடுத்து மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு மாநில அமைச்சர்கள் உட்பட 19 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ பிசாஹு லால் சிங் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்துள்ளனர். இது குறித்து அவர் கூறியவை, நான் உட்பட ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சிவராஜ் சிங் சவுகான் உடன் இருக்கப்போகிறோம். எந்த அழுத்தமும் எங்களுக்கு இல்லை. விவசாயிகளுக்காக நிறைய திட்டங்களை கொண்டுவந்தவர் சிவராஜ் சவுகான் என கூறினார்.
English Summary
congress mla join bjp for madhya pradesh