காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக தமிழகத்தை சேர்ந்தவர்? பரபரப்பு பேட்டி.!
congress leader may be tamilnadu person
முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், ராஜ்யசபா உறுப்பினருமான ப.சிதம்பரம் இன்று காரைக்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது,
இந்தியா பல்வேறு கலாச்சாரங்களை கொண்டது. ஒரே நாடு, ஒரே தேர்வு என்பதை தொடக்கத்திலேயே எதிர்க்க வேண்டும். இல்லையெனில் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பார்கள்.
இது முற்றிலும் ஆபத்தானது. நாட்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வகையில் 18 முதல் 25 வயதுடையவர்கள் 25 சதவீதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர்.
பா.ஜனதா அரசால் புதிய திட்டத்தை கொண்டுவர இயலாது. அவர்களால் இருக்கின்ற திட்டத்தை அழிக்கத்தான் முடியும். வருகின்ற ஏப்ரல் மாதம் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தலைவராக என்னை தேர்ந்தெடுக்க 101 சதவீதம் வாய்ப்பு உள்ளது.
5ஜி ஏலம் மூலம் 5 லட்சம் கோடி வரை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 1.56 லட்சம் கோடி தான் ஏலம் போய் உள்ளது. இதில் ஊழல் நடந்துள்ளது". என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
congress leader may be tamilnadu person