அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினுடன் திடீரென சந்தித்த அரசியல் கட்சி தலைவர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தற்போது  டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 8ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்து வரும் நிலையில், சரியான வார்டு வரையறை செய்யவில்லை. இட ஒதுக்கீடு பின்பற்றவில்லை என திமுக மதிமுக இந்திய கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். 

இந்த வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் 2011ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படி நடத்த வேண்டும். அதேசமயம் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்குள் வார்டு வரையறை பணிகளை முடிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதனால் திட்டமிட்டபடி 27 மாவட்டங்களுக்கு, தமிழகத்தில் வரும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

இந்தநிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், கம்யூ. கட்சிகளின் தலைவர்கள் முத்தரசன், பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.

நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

communist leaders meet with mk stalin


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->