பெற்ற தந்தையே இவரை நம்பாத போது தமிழக மக்கள் எப்படி நம்புவார்கள்.!! ஸ்டாலினை விளாசிய முதல்வர் பழனிசாமி.!!
cm palanisamy blams stalin
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முத்தம்மாள் காலனியில் திறந்த வேனில் சென்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட மக்கள் குறை சம்பந்தமாக இதுவரை தன்னை சந்தித்து மனு கொடுத்ததில்லை என்று விமர்சித்தார். மேலும், திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் கனவிலே இருக்கிறார்
தி.மு.க. தலைவராக கருணாநிதி இருந்தார். அவர் முழுமையாக செயல் படாத நிலையில் கூட தனது தலைவர் பதவியை யாருக்கும் வழங்கவில்லை. மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக தான் இருந்தார். கருணாநிதியின் மறைவிற்கு பிறகுதான் தி.மு.க.வின் தலைவரானார் பெற்ற தந்தையே இவரை நம்பாத பொழுது தமிழ்நாட்டு மக்கள் எவ்வாறு இவர்மீது நம்பிக்கை வைப்பார்கள்
ஒரு விவசாயி நாட்டை ஆளாலாமா என்று ஸ்டாலின் கேட்கிறார் தமிழகத்தை பொறுத்தவரை இனிமேல் ஒரு விவசாயிதான் நாட்டை ஆள முடியும் என்பதை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தி.மு.க.என்றாலே அராஜகம் தான். அழகு நிலையத்திற்கு சென்று பெண்களின் மீது தாக்குதல் நடத்துவது, பிரியாணி கடைக்குச் சென்று பிரியாணி சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் தகராறு செய்வது, செல்போன் கடையில் செல்போன் வாங்கிவிட்டு பணம் தராமல் தகராறு செய்வது போன்ற பல்வேறு அராஜகங்களில் ஈடுபட்டு வருவது தி.மு.க.வினர் தான்
English Summary
cm palanisamy blams stalin