#BigBreaking | தேர்தல் வெற்றி குறித்து முக ஸ்டாலின் கூறிய 'அந்த' வார்த்தை.! உடன்பிறப்புகளுக்கு கட்டளை.!
cm mk stalin thanks to voters
தமிழகத்தில் காலியான உள்ளாட்சி பதவிகளுக்கும், விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கும் நடைபெற்றற்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களை கைப்பற்றி, மிகப்பெரிய வெற்றியொயை பெற்றுள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாக்களித்த அனைவருக்கும் எனது 'நெஞ்சார்ந்த நன்றிகள்' என்று, தனது நன்றியை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
"கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு காப்பாற்றும் என்ற நம்பிக்கையுடன் வாக்களித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றி கொண்டாட்டத்தில் யாருக்கும் இடையூறு ஏற்படாதவாறு அமையவேண்டும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஐந்து ஆண்டுகளில் அடையவேண்டிய நம்பிக்கையை, 5 மாதங்களில் பெற்ற பெருமையுடன் மகிழ்ச்சி கொள்வதாக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
cm mk stalin thanks to voters