தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை.! தமிழக முதல்வர் முக ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கை.!
cm mk stalin say about crackers issue
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில், நாட்டின் டெல்லி, ராஜஸ்தான், ஒடிசா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசுகள் வெடிப்பதற்கு தடைவிதித்து, அந்தந்த மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த மூன்று மாநிலங்களில் பட்டாசுகளுக்கு தடை விதிக்க காரணத்தினால், தமிழகத்தின் சிவகாசியில் உற்பத்தியான பட்டாசுகள் தேக்கம் அடைந்துள்ளது. இதனை அடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு சிவகாசியை சேர்ந்த பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஹரியானா, ராஜஸ்தான், ஒடிசா, டெல்லி ஆகிய மாநிலங்களில் முதலமைச்சர்களுக்கு பட்டாசுகான தடையை நீக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்த அவருடைய அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "கொரோனா நோய்த்தொற்றால் நாடு முழுவதும் உள்ள சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பட்டாசுத் தயாரிக்கும் தொழிலை நம்பி 8 லட்சம் பேர் உள்ளனர்.
காற்று மாசு காரணமாக தங்கள் மாநிலங்களில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை புரிந்து கொள்கிறேன்.
இருந்த போதிலும், உச்சநீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளுக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்று அந்த கடிதத்தில் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
cm mk stalin say about crackers issue