சிதம்பரம் தேர் ஓடவில்லை என்றால் முதல்வருக்கு தான் ஆபத்து., பீதியை கிளப்பும் பேட்டி.! - Seithipunal
Seithipunal


உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலின் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடராஜர் கோவில் தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசனம் விழா நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டத்தில், கொரோனா நோய்தொற்று பரவலை தடுக்கும் விதமாக நடராஜர் கோவிலில் தேர் திருவிழா (தேரோட்டம்) ரத்து செய்யப்படுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜப் பெருமானும், சிவகாமசுந்தரி அம்மன் வைக்கப்பட்டு, அன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை  பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆருத்ரா தரிசனத்தின் போது பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என்றும், ஆனால் தரிசனம் முடிந்த பிறகு நாளை மாலை 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரை பக்தர்கள் நடராஜரை தரிசனம் செய்ய கீழ் சன்னதி வழியாக அனுமதிக்கப்படுவார்கள் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பா.ஜ. க. தேசிய செயலாளர் எச் ராஜா சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவிக்கையில்,

"நாளை 19-ந் தேதி ,20ந் தேதியன்று தேர் திருவிழா நடைபெற இருந்தது ரத்து செய்யப்பட்டுள்ளது.இது கண்டிக்கத்தக்கது.

சிதம்பரம் கோவிலில் தேர் ஓட வில்லை என்றால்., அது அரசருக்கு தான் ஆபத்து. தற்போது அரசர் யார் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்.

சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் திருவிழாவிற்கு அனுமதி வழங்கவில்லை என்றால் பக்தர்கள், இந்து அமைப்பினரை ஒன்று திரட்டி கோவிலின் முக்கிய வீதிகளில் முன் திரண்டு, சிதம்பரம் நகரை ஸ்தம்பிக்க வைப்போம்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chidambaram Natarajar Temple Therottam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->