வசமாக சிக்கிய திமுக எம்எல்ஏ.. போடப்பட்ட வழக்கு.. திக்குமுக்காடும் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


சென்னை சௌகார்பேட்டை, சூளைமேடு பகுதியில் ராஜ் குமார் மற்றும் கண்பத்லால் என்பவருக்கும் இடையே நிலத் தகராறு ஏற்பட்டுள்ளது. திமுக எம்எல்ஏ சேகர்பாபு, கண்பத்லாலுக்கு ஆதரவாக தன்னை பணம் கேட்டு மிரட்டுவதாக ராஜ் குமார் சென்னை பஜார் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திமுக எம்எல்ஏ சேகர்பாபு, திமுக வழக்கறிஞர்கள்  மீது வழக்கு பதிவு செய்து பதிவு செய்யுமாறு யானை கவுனி போலீசாருக்கு உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து திமுக எம்எல்ஏ சேகர்பாபு உள்ளிட்ட அனைவரின் மீது மிரட்டல் மற்றும் பணம் பறித்தல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இதனை எதிர்த்து சேகர்பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சேகர்பாபு மற்றும் திமுக வழக்கறிஞர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தவித்தார். 

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கும் வரை காவல் துறையினர் இதில் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் வழக்கறிஞர்கள் மீதான வழக்கை இறுதியாக சிறப்பு அமர்வு விசாரிக்கும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai police case filed for dmk mla


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->