நீட் தாக்கம் குறித்து அரசு அமைத்த குழு செல்லும்.! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


நீட் பாதிப்புகளை ஆராய தமிழக அரசு அமைத்த ஏ.கே ராஜனின் குழு செல்லும் என்று, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள நீதியரசர் ஏ.கே ராஜனின் குழுவை இரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மனுவில், "தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள நீதியரசர் ஏ.கே ராஜனின் குழுவை இரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், "இந்த வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும்" என்று உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. 

இந்நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், "நீட் பாதிப்புகளை ஆராய தமிழக அரசு அமைத்த ஏ.கே ராஜனின் குழு செல்லும்" என்று தீர்ப்பு வழங்கி, தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள ஆய்வுக்குழு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல" என்று, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மேலும், நீட்தேர்வு ஆய்வுக் குழு அமைத்தது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது இல்லை என்றும், மக்கள் கருத்து கேட்பு தொடர்பான கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், நீட் தமிழக அரசு அமைத்த குழு மூலம் ஆதாரம் கிடைத்தால், அதன் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைமுறையை மாற்றியமைக்க கோரலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai hc judgement fot a k rajan commity case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->