திமுக கூட்டணி கட்சியின் 'ரவுடி' வெட்டி படுகொலை.! சென்னையில் பெரும் பரபரப்பு.!
chennai congress rowdy murder
சென்னை : காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகரும், பிரபல ரவுடியும் ஆன ஒருவரை மற்றொரு ரவுடி கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம், சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் நாகூர் மீரான். இவர் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தென் சென்னை மாவட்ட துணைத் தலைவராக இருந்து வருகிறார்.
மேலும், இவர் பிரபல ரவுடியாக இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று தனது பெண் தோழிகளைப் பார்க்க சென்ற நாகூர் மீரானை, 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.
இதையடுத்து, கொலை செய்த 5 பேர் கொண்ட கும்பல், ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
இந்த கொலை சம்மந்தமாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், யார் பெரிய ரவுடி என்பதில் என்பதில் காங்கிரஸ் கட்சி பிரமுகருக்கும் மற்றொரு தரப்பு ரவுடிக்கும் இடையே ஏற்பட்டதால் மோதலால் இந்த படுகொலை சம்பவம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
English Summary
chennai congress rowdy murder