விடாமல் நெருக்கடி கொடுக்கும் சிபிஐ! சிதம்பரத்திற்கு விடாமல் நம்பிக்கை கொடுக்கும் முக்கிய நபர்!   - Seithipunal
Seithipunal


ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வந்த நிலையில், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால், மேலும் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறுவதால், அவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் மூன்று மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் அவரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

இதனையடுத்து தற்போது அவர் சிபிஐ நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு கொண்டிருக்கிறார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதால், நீதிமன்ற வளாகம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

சிபிஐ நீதிமன்றத்தின் அறையில் மூத்த வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன் மற்றும் வழக்கறிஞர் அர்ஷ்தீப் சிங் குரானா ஆகியோர் ஏற்கனவே வந்துவிட்ட நிலையில்,  சிதம்பரத்தினை ஜாமினில் எடுத்தே ஆக வேண்டும் என காங்கிரஸ் சீனியர்களும் தீவிரம் காட்டி வருகிறார்கள். காங்கிரஸ் மூத்த தலைவர்களும், சிதம்பரத்தின் அமைச்சரவை சகாக்களுமான வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் சிபிஐ நீதிமன்றத்திற்கு வருகை புரிந்துள்ளார்கள். சற்றுமுன் சிதம்பரம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBI is giving up on letting up..the key person hope to chidambaram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->