கருத்தடை விவகாரம்: ஆண்களுக்கு அழைப்பு விடுத்த அதிமுக அமைச்சர்.!
c vijayabasker spokes on assembly
பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றுவருகின்றது. இந்த நிலையில், ஆண்கள் கருத்தடை சிகிச்சை செய்ய ஊக்குவிப்பதற்காக அரசாங்கத்திடம் ஏதேனும் திட்டம் இருக்கின்றதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர், ”ஒவ்வொரு ஆண்டுக்கும் இரண்டு லட்சம் பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஆண்களுக்கு கத்தியின்றி, ரத்தமின்றி, எந்த விதமான தழும்புமின்றி கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
2018 ஆம் ஆண்டு ஆண்கள் 80 பேருக்கும், 2019 ஆம் ஆண்டில் 800 ஆண்களுக்கும் இந்த கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது.” எனவும் தெரிவித்துள்ளார்.
English Summary
c vijayabasker spokes on assembly