#BigBreaking: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் சற்றுமுன் வாபஸ் பெறப்பட்டது.! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை.!
BUS STRIKE WITHDRAWN
சற்று முன்பு தமிழகம் முழுவதும் இன்று மூன்றாவது நாளாக நீடித்து வந்த போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த போக்குவரத்து தொழிலார் தொழிற்சங்கங்கள் மூன்றாவது நாளாக இன்று வரை வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வந்தனர். இதன் காரணமாக தமிழக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
இந்த நிலையில், கோரிக்கை ஏற்கப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கொண்ட வேலைநிறுத்தத்தை கைவிட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் லட்சுமிகாந்தன் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன் பெற்று தற்போது இந்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.