சேலம் : நீண்ட நேரம் செல்போனில் பேசிய பாசமலர்.! கழுத்தை திருவி கொன்ற அண்ணன்.! - Seithipunal
Seithipunal


வேறு ஒரு நபருடன் போனில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததால் தங்கையை அண்ணனே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அருகே நீண்ட நேரம் செல்போனில் உரையாடிக் கொண்டிருந்த சிறுமியை, கழுத்தை நெரித்து கொலை செய்த அண்ணனை போலீசார் அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகள் காயத்ரிக்கு உடல்நலக்குறைவு என்று கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனையில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், நீண்ட நேரம் காயத்ரி செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததால், ஆத்திரமடைந்த அண்ணன் பாலமுருகன், சிறுமியின் கழுத்தை நெறித்துக் கொன்றது தெரியவந்தது.

இதனையடுத்து பாலமுருகனை அதிரடியாக கைது செய்த போலீசார், சிறுமி காயத்ரியின் கொலைக்கு உறவினர்களும் உடந்தையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

brother kill sister for over talk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->