முஸ்லிம்கள் மசூதிகளில் தொழுகை நடத்தவில்லை இதுதான் நடக்கிறது... எம்.பி., சர்ச்சை பேச்சு ! - Seithipunal
Seithipunal


சூதிகளில் கத்தி, சோடா பாட்டில் ,வாள் போன்ற கடுமையான ஆயுதங்களை இஸ்லாமியர்கள் பதுக்கி வைத்திருப்பதாக கர்நாடக மாநிலத்தின் பாஜக எம்.பி ரேணுகாச்சாரி கூறியிருக்கிறார். இவரின் இந்த சர்ச்சை கருத்துக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு வலுத்துள்ளது.

பெங்களூரை அடுத்த ஹோன்னாலி என்னும் பகுதியில் மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு  ஆதரவான பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அம்மாநில பாஜக எம்.பி., ரேணுகாச்சார்யா. அதில் அவர் பேசுகையில், மசூதிகளில் தொழுகை நடத்துவதற்கு பதிலாக முஸ்லிம்கள் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருப்பதாக கூறினார். 

மேலும், பதுக்கப்பட்ட ஆயுதங்களை, இஸ்லாமிய தலைவர்களும் பாதுகாத்து வருவதாக அவர் பேசினார். ரேணுகாச்சாரியின் இந்தக் கருத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுத்து வருகிறது. 
 
இதுகுறித்து கூறிய பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ், ரேணுகாச்சாரி தெரிவித்த கருத்துக்கும், பாஜக கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், இது அவரது சொந்த கருத்து என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp mp says about muslims


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->