வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்து விட்டேன்... அமைச்சர் பேசிய வீடியோ!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரத்தில் வருகிற 21-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக அமைச்சரான பபன்ராவ் லோனிகர் ஜல்னா மாவட்டத்தில் உள்ள பார்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

பார்தூர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், தேர்தலில் வெற்றி பெற அமைச்சர் பபன்ராவ் லோனிகர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக, சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஜல்னாவில் நடந்த பிரசார கூட்டத்தில் அமைச்சர் பபன்ராவ் லோனிகர், நான் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்து விட்டேன். இதனால் தேர்தலில் வெற்றி பெறுவதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை என கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், அமைச்சர் பபன்ராவ் லோனிகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp minister says money paid for voters


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->