செங்கல் திருடியதாக., ஸ்டாலின் மகன் மீது காவல் நிலையத்தில் புகார்.! - Seithipunal
Seithipunal


எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் செங்கல் திருடியதாக உதயநிதி ஸ்டாலின் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்களது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து ஸ்டாலின் மற்றும் அவரின் மகன் உதயநிதி, தமிழகம் முழுவதும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்டாலின் மகன் உதயநிதி தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது, "மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய அரசு கட்டியது. அதனை நான் கையோடு எடுத்து வந்துவிட்டேன். இதோ பாருங்கள்." என்று ஒரு செங்கல்லை எடுத்து பொதுமக்களிடம் காட்டி பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் செங்கல் திருடியதாக, உதயநிதி ஸ்டாலின் மீது காவல் நிலையத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் புகார் அளித்துள்ளார்.

கோவில்பட்டி காவல் நிலையத்தில், பாஜக நிர்வாகி நீதி பாண்டியன் என்பவர் ஒரு புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்த செங்கல்லை மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் திருடிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp member compalaint against udhyanithi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->