திமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம்.. 3 பேர் இடையே நிலவும் போட்டி.! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில தலைவர் எல். முருகன் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, திமுகவின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலினா.? கனிமொழியா.? அல்லது உதயநிதியா.? என்று சொல்ல முடியாத நிலையில் திமுக தற்போது உள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் அக்கட்சி நிர்வாகிகள் அபகரித்த நிலங்களை மீட்பதற்காகவே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தனிப் பிரிவை உருவாக்கினார். திமுக ஆட்சியில் மின்தடை, விவசாயிகள் பிரச்சனை போன்றவற்றால் மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அறிவர். இதனால் வரும் தேர்தலில் திமுக தோற்கடிப்பது உறுதி. 

பெண்ணுரிமை பற்றிப் பேசும் திமுகவில், அந்த கட்சியின்  நிர்வாகி பூங்கோதை ஆலடி அருணாவுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மதுரையில் நடந்த பாஜக நிகழ்ச்சியில் விஷமிகள் ஊடுருவி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்தனர். அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டார்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல் வந்தாலும், அதனை சந்திக்க பாஜக தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp l murugan press meet about dmk cm candidate


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->