ஆறு வருடங்களில் முதன்முறையாக சறுக்கிய பாஜக! அதிர்ச்சியில் அமித் ஷா!
BJP Failed Maharashtra political
மகாராஷ்டிராவில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்தும், தேசியவாத காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டது. பாஜக சிவசேனா கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கூட்டணியாக இருந்த நிலையில், இரண்டு கட்சிகளுக்கும் இடையே முதலமைச்சர் யார் என்பதில் பிரச்சினை ஏற்பட 32 வருட கூட்டணி முறிந்தது.
இதனையடுத்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சியை அமைக்க சிவசேனா முடிவு செய்த நிலையில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது. இந்த நிலையில் நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இருந்து வந்த நிலையில், இன்று பேச்சுவார்த்தை ஒருமனதாக முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. அதன்படியே காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் சிவசேனா ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க மும்பையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு வாய்ப்பே இல்லாத மாநிலங்களில் எல்லாம் பாஜக ஆட்சியமைத்து அசரவைத்தது. கோவா, மணிப்பூர், அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் என பல மாநிலங்களில் அமித் ஷாவின் மேஜிக் வேலை செய்தது. ஏன் தற்போது மஹாராஷ்ட்ரா உடன் தேர்தலை சந்தித்த ஹரியானாவில் கூட பெரும்பான்மை இலலாமல் ஆட்சி அமைத்தது.
முதலில் கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாமல் பாஜக ஆட்சியமைக்காமல் சொதப்பியது. பின்னர் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு அமித் ஷாவின் மேஜிக்கில் ஆட்சி அமைத்தது. முதன்முறையாக அமித் ஷாவின் மேஜிக் கவிழ்ந்துள்ளது. அதுவும் 32 வருடங்கள் உடன் இருந்த கட்சியின் முயற்சியில் மண்ணில் கவிழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
BJP Failed Maharashtra political