முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு போஸ்டர்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உதவியாளர் கைது.! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறாக சித்தரிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வட சென்னை பகுதியில் கடந்த 11 ஆம் தேதி பல்வேறு தெருக்களில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் போலி பத்திரிக்கை பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தன. இது குறித்து சென்னை மாநகராட்சி மண்டலம் 5-ன் உதவி பொறியாளர் ராஜ்குமார் மற்றும் துறைமுகம் திமுக கிழக்குப் பகுதி செயலாளர் ராஜசேகர் ஆகியோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், முதலமைச்சரை அவதூறாக சித்தரித்து போஸ்டர் ஒட்டுமாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் கூறியதாகவும், தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வாசகம் மற்றும் கார்ட்டூன்களை சித்தரித்து சிவகுருநாதனுக்கு அனுப்பியதும் தெரியவந்தது.

இதனையடுத்து, தலைமறைவாக இருந்த கிருஷ்ணகுமார் முருகனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Annamalai assistant arrested


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->