பவன் கல்யாணின் பவர் கூட்டணி.. பரபரப்பு பேட்டி..!!
Bavan kalyan alliance with bjp
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைந்துள்ளதாக ஜனசேனா கட்சியுடைய தலைவர் பவன்கல்யாண் தற்போது அறிவித்துள்ளார். இவர்களின் கூட்டணி குறித்த பேச்சுவார்தையானது அங்குள்ள விஜயவாடா நகரில் நடைபெற்றுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் இரு கட்சிகளின் தலைவர்கள் நடத்திய ஆலோசனைக்கு பின்னர் கூட்டணி குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியானதை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பவன் கல்யாண் பேசிய சமயத்தில்,
ஆந்திர மக்களின் நலனிற்காக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம். வரும் 2024 ஆம் வருடத்தில் ஆட்சியை கைப்பற்றி மக்களுக்கு நல்லாட்சியை தர இரண்டு கட்சியும் இணைந்து செயல்படுவோம்.
ஜாதி ரீதியான அரசியலுக்கு எதிராக இக்கோட்டனை செயல்படும் என்றும், மொத்தமாக 3 தலைநகர் உருவாக்கப்படும் என்று அறிவித்த ஜெகன் மோகனின் முடிவிற்கு எதிராக பெரியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
English Summary
Bavan kalyan alliance with bjp