#BREAKING || தேர்தல் களத்திலேயே உயிரைவிட்ட திமுக பெண் வேட்பாளர்.! அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் அதிர்ச்சியில் திமுகவினர்.! - Seithipunal
Seithipunal


திமுக பெண் வேட்பாளர் வாக்கு சேகரிப்பின் போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை நகராட்சி திமுக பெண் வேட்பாளர், வாக்கு சேகரிப்பின் போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 9வது வார்டில் திமுக வேட்பாளராக அனுசுயா  அறிவிக்கப்பட்டார்.

இதனையடுத்து அய்யம்பேட்டை பகுதியில் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். கடைசி நாளான இன்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக பெண் வேட்பாளர் அனுசூயாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

58 வயதான பெண் வேட்பாளர் அனுசுயா பிரச்சாரத்தின் போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, தமிழகத்தில் திமுக வேட்பாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை திமுக வேட்பாளர், அத்தாணி பேரூராட்சி வேட்பாளர் என ஏற்கனவே இரண்டு பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள நிலையில் மேலும் ஒரு திமுக வேட்பாளர் உயிரிழந்துள்ளது திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AYYAMPETTAI DMK CANDIDATE DEAD


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->