எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லி! அவசரமாக விரைந்து வரும் மோடி!
arun jaitley in hospital
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த மூத்த தலைவருமான அருண் ஜெட்லி உடல்நிலை குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆட்சியின் போது மோடி தலைமையிலான அரசில் மத்திய நிதி அமைச்சராக பணியாற்றியவர் அருண் ஜெட்லி. கடந்த ஆண்டு ஆட்சி முடியும் தருவாயில் அடிக்கடி உடல்நிலை குறைவால் அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தார். கடைசி பட்ஜெட்டை கூட அவரால் தாக்கல் செய்ய முடியவில்லை.
இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிட வில்லை. கடந்த முறை லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர், ராஜ்யசபா உறுப்பினர் ஆகி மத்திய அமைச்சராக பணியாற்றினார். இந்த முறையும் ஆட்சி அமைத்ததும் அவரை அமைச்சரவையில் சேர்ப்பதற்காக மோடி தயாராகிக் கொண்டிருந்த பொழுது, அமைச்சரவையில் எனக்கு இடம் ஒதுக்க வேண்டாம் என தானாகவே அரசில் இருந்து விலகிக்கொண்டார்.
அருண் ஜேட்லி அவர் உடல் நிலையை கருத்தில் கொண்டு செயல்பட முடியாது என தெரிவித்து வேறு ஒருவருக்கு அந்த வாய்ப்பினை வழங்குமாறும் தெரிவித்தார். இந்நிலையில் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து பிரதமர் மோடி உடனடியாக புறப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருக்கிறார். இதனால் பாஜக வட்டாரத்தில் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.