ஜெயலலிதா மரணத்தை ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடையா.?! சென்னை உயர்நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு.!!
arumugasami inquiry ban case issue
ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 75 நாள்கள் அங்கு சிகிச்சை அளித்தனர். கடைசியில் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார்.
இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, இது தொடர்பாக விசாரிக்க, கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த விசாரணை ஆணையம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தில் முன்னாள் தலைமை செயலாளர், உயர் காவல் அதிகாரிகள், அப்போலோ மருத்துவர்கள் உட்பட பலரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சசிகலா தவிர, மற்ற அனைவரிடமும் விசாரணை முடிந்துள்ள நிலையில், ஓ. பன்னீர் செல்வம் ஆஜராக, ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை பற்றி விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிப்பதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
English Summary
arumugasami inquiry ban case issue