அரியலூர்: திருமாவளவனை கண்டித்து., பாஜக மகளிரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!  - Seithipunal
Seithipunal


சிதம்பரம் எம்.பி.,திருமாவளவன் இந்து பெண்களை இழிவுபடுத்தியதாக கூறி அதனைக் கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் இன்று அரியலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சமீபத்தில் மனுதர்மத்தில் பெண்கள் பற்றி இழிவாக கொல்லப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 

திருமாவளவன் பேசிய வீடியோவை எடிட் செய்து பெண்கள் குறித்து திருமாவளவன் மிகவும் தவறாக பேசி உள்ளதாக சித்தரிப்பதாக அவரது அதர்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து, சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பெரும் விவாதம் நடைபெற்று வருகின்றது. 

இந்த நிலையில் இன்று அரியலூர் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பாக அரியலூரில் பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ஐயப்பன், மாவட்ட செயலாளர் ஸ்ரீ நந்தினி விக்னேஸ்வரன், மாவட்ட மகளிரணி தலைவி சுகன்யா, மாவட்ட பொதுச்செயலாளர் மகாலிங்கம் மற்றும் மாவட்ட துணை தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு  திருமாவளவனை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ariyalur bjp protest against thirumavalavan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->