மீண்டும் ஆட்சிக்கு வந்தால் லண்டனை போல சாலையை மாற்றுவேன்- முதல்வர் உறுதி.!  - Seithipunal
Seithipunal


விரைவில் சட்டமன்றத் தேர்தல் ஆனது டெல்லியில் நடக்க இருக்கின்றது. அங்கே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகின்றார். சமீபத்தில் அனைத்து போக்குவரத்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்து பெண்களின் வாக்குகளை மொத்தமாக தன் பக்கம் திசை திருப்பி இருக்கின்றார்.

மேலும், தற்பொழுது இன்னொரு வாக்குறுதியையும் அவர் அளித்து இருக்கின்றார். டெல்லியை முற்றிலுமாக வெளிநாட்டை போல் அழகுபடுத்த திட்டமிட்டிருப்பதாகவும், டெல்லியில் இருக்கும் 40 சாலைகளையும் லண்டன் மற்றும் டோக்கியோ சாலைகளை போல அதி நவீனமாக மாற்ற போவதாகவும் இதுகுறித்து நிபுணர்களிடம் ஆலோசனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் வெற்றி பெற்று முதல்வர் ஆனால், இந்த திட்டத்தை அமல்படுத்துவது உறுதி என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், யமுனை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி விரைவில் துவங்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதுபோன்ற வாக்குறுதிகள் காரணமாக பிற கட்சிகள் கலக்கத்தில் இருப்பதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aravinth gejrival says about delhi road


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->