அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி போட்டியிட தடைகோரிய மனு.! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த தேர்தலில் அரவக்குறிச்சியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில்பாலாஜியின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்திக் கட்சியைச் சேர்ந்த ஏ.பி.கீதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில் கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டப் பேரவைக்கு பொதுத் தேர்தல் நடந்த போது பணப்பட்டுவாடா காரணமாக அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது பின் 2016 நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது இந்த தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

செந்தில் பாலாஜியின் ஊழல் நடவடிக்கைகளால் தான் கடந்த முறை அரவக்குறிச்சி தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்பதால், இம்முறை அவரது வேட்புமனுவை ஏற்கக் கூடாது எனவும் அவ்வாறு அவரை போட்டியிட அனுமதித்தால் அது தவறான முன்னுதாரணமாகி விடும் எனவும் மனுவில் கூறியுள்ளார்

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு 2016-ம் ஆண்டு இதே கோரிக்கையுடன் வழக்கு தாக்கல் செய்ததை மறைத்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக கூறி தள்ளுபடி செய்து உத்தரவுயிட்டனர். 

மேலும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக, 30,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள் 15 நாட்களில் இந்த தொகையை சிறார் நீதி நிதியத்துக்கு செலுத்தவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aravakurichi by election senthil balaji case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->