போலீசாருக்கு பகிரங்கமாக மேடையில் மிரட்டல் விடுத்த அண்ணாமலை.! சர்ச்சை பேச்சு.! - Seithipunal
Seithipunal


இன்று கோவையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "இரண்டு வருடங்களுக்குப் பிறகு எங்கள் மீது எந்த காவல்துறை கை வைத்ததோ? அந்த காவல்துறை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டால், நாங்கள் பொறுப்பல்ல. உங்களது பணி ஓய்வின் போது உங்களுக்கு பென்ஷன் பணம் கிடைக்கவில்லை என்றாலும் நாங்கள் பொறுப்பல்ல. 

எங்கள் மீது கை வைத்த காவல்துறையினர் ஒவ்வொரு நாளும் ஏன் இந்த புனிதமான காவி உடையை அணிந்தோம் என்று நீங்கள் வருத்தப்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இதில் 95 சதவீத காவல்துறை நண்பர்கள் நல்லவர்கள் தான். அவர்கள் மனசாட்சிக்கு பயந்தவர்கள்.

வெறும் பனிரெண்டாயிரம், 20 ஆயிரம் சம்பளம் கிடைத்தால் கூட அதை வைத்து கண்ணியமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்கின்றார்கள். ஆளும் கட்சிக்கு பயப்பட மாட்டேன், என்னை தூத்துக்குடி, திருநெல்வேலியில் பணி மாற்றம் செய்தாலும் பயப்பட மாட்டேன் என்ற நண்பர்களும் இருக்கின்றனர்."என்று பேசியுள்ளார்.

பாஜக அண்ணாமலை இப்படி காவல்துறையினரை மிரட்டும் விதமாக சவால் எடுத்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai speech about Kovai Police 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->