தமிழக பாஜகவின் முக்கிய புள்ளி மருத்துவமனையில் அனுமதி.!
annamalai affected corona
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நேற்றுமுதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பட்டு வழிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறிப்பாக முகக்கவசம் அணியவில்லை என்றால் 200 ரூபாயும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் 500 ரூபாயும் அபராதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கொரோனா நோய்த்தொற்றுக்கு தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாஜகவின் மணிலா துணைத் தலைவரும், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளருமான அண்ணாமலைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், "தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள்" என்று அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
English Summary
annamalai affected corona