தமிழகம் வந்து, தமிழக அரசை அசிங்கப்படுத்த ஆந்திர முதல்வர்.!! இபிஎஸ்-ஓபிஎஸ்க்கு வந்த கடும் சோதனை!!
தமிழகம் வந்து, தமிழக அரசை அசிங்கப்படுத்த ஆந்திர முதல்வர்.!! இபிஎஸ்-ஓபிஎஸ்க்கு வந்த கடும் சோதனை!!
அண்ணா அறிவாலய வளாகத்தில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். அவருடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையிலும், திமுக பொது செயலாளர் க.அன்பழகன் முன்னிலையிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா முடிந்த உடன் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. அந்த கூட்டத்தில் நாட்டில் உள்ள முக்கிய தலைவர்களும், தோழமை கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தின் மேடையில் பேசிய ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள், நாடு போற்றும் அரசியல் தலைவர் கருணாநிதி நீண்டகால அரசியல் அனுபவம் பெற்று இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர். சக்தி வாய்ந்த மாநிலம் சக்திவாய்ந்த நாட்டை உருவாக்கும் என்று முழங்கியவர் கருணாநிதி. வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஸ்டாலின் தலைமையில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்'' என்று தெரிவித்தார்.
மேலும், தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியும் மத்திய அரசின் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இவன்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
English Summary
andra cm open talk about tn govt