மு.க. ஸ்டாலின் முடிந்தால் இதை நிரூபியுங்கள்... இல்லையென்றால் அழகிரியின் ஆசையை நிறைவேற்றுங்கள்..! சரமாரியாக கேள்வி கேட்ட அன்புமணி ராமதாஸ்.!!
anbumani ramadoss says about mk stalin
நேற்று அரங்கோணம் பாராளுமன்ற தொகுதி பாமக ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து அரக்கோணத்தில் பாமக சார்பில் பிரச்சாரக்கூட்டம் நடைப்பெற்றது. இந்த பிரசாரத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், ஏ.கே.மூர்த்தி ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர்,
அரக்கோணத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், வன்னியர் சொத்துக்களை எல்லாம் நானும் எனது குடும்பத்தாரும் அபகரித்துவிட்டோம் என கூறுகிறார். இந்த அபகரிப்புக்கு அர்த்தம் கொண்டு வந்ததே திமுக தான். எங்களுக்கு அபகரிப்பு என்றால் என்னவென்று தெரியாது.
இந்த விவகாரத்தில் காவல் துறை, நீதிமன்றம் விசாரணை, சிபிசிஐடி, சிபிஐ என எந்த விசாரணை வேண்டுமென்றாலும் வையுங்கள் நாங்கள் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். அப்படி விசாரணை செய்து திமுக குற்றத்தை நிரூபித்துவிட்டால், மு.க.ஸ்டாலின் என்ன சொன்னாலும் செய்கிறேன். அப்படி அவரால் குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை என்றால், நீங்கள் உங்கள் தலைவர் பதவியிலிருந்து விலக தயாரா ? என்று கெடவி எழுப்பினர். அதை தான் அழகிரி உட்பட உங்கள் கட்சியில் உள்ள அனைவரும் விரும்புகிறார்கள் என்று கூறினார்.
English Summary
anbumani ramadoss says about mk stalin