அன்புமணி ராமதாஸ் கேட்ட ஒற்றை கேள்வி ஆடிப்போன ஸ்டாலின்! ஆட்டம்கண்ட திமுக!!
anbumani ramadoss election campaign
நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல், இன்னும் 6 நாட்களில் நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி உடல்நல குறைவால் காலமானார். சில நாட்கள் முன்பு விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதியில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது ஸ்டானினை கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார்.
அப்போது அவர் பேசியவை, நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து திமுக வெற்றி பெற்றது. அது தற்போது தெரிந்துவிடும் என்று திமுக அச்சப்படுகிறது. மீத்தேன், கச்சத்தீவு, காவிரி மற்றும் இலங்கை தமிழர் பிரச்சனை போன்ற அனைத்து பிரச்சனைக்கும் திமுகதான் காரணம் என்று கூறினார். மேலும் பேசிய அவர், தேர்தல் வந்தவுடனே திமுகவுக்கு வன்னியர்கள் ஞாபகம் வந்துவிடும் எனவும், அதனால் தான் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அறிவித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டி பேசினார்.
English Summary
anbumani ramadoss election campaign